சிவில் பிரச்சினைகளில் அமல்படுத்தப்படாத 8.82 லட்சம் நீதிமன்ற தீர்ப்புகள்: உச்சநீதிமன்றம் கவலை

1 Min Read

புதுடில்லி, அக்.21 சிவில் பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய 8.82 லட்சம் தீர்ப்புகள் அமல்படுத் தாதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சிவில் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டு ம் என கடந்த மார்ச் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு தொடர்பாக ஆய்வு செய்த நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் பங்கஜ் மித்ரா ஆகியோர் கொண்ட அமர்வு கூறியதாவது: சிவில் வழக்குகள் குறித்து எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரம் அதிருப்தி அளிக்கிறது. சிவில் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை எச்சரிக்கை மணி அளிக்கிறது. தற்போதைய தேதி வரை 8,82, 579 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். மார்ச் 6இல் துவங்கி ஆறு மாதத்தில் மட்டும் 3,38, 685 உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதனை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றால் அது அர்த்தமற்றது. நீதியை கேலிக்கூத்தாக்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களும் தங்களது வரம்பில் உள்ள மாவட்டங்களில் நிலுவையில் உள்ள இத்தகைய மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து நடை முறைகளை உருவாக்க வேண்டும்.

ஆனால், கெட்ட வாய்ப்பாக இதுபோன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த தகவல்களை கருநாடக உயர்நீதிமன்றம் அளிக்க தவறிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் சிவில் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் முடிவு எடுக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்த பெற அளிக்க கருநாடகா உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதி மன்றம் பதிவாளர் நினைவூட்ட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *