சென்னை, அக். 18- அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் நலன் கருதி நிவாரணம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார் பில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டுக்கு ரூ.11 கோடியே 17லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 810 விண்ணப்பங்கள் கடந்த 1ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பிலான காப்பீடு பத்திரம் சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இது போக மீதம் ரூ.5 கோடியே 23 லட்சம் நிதி இருக்கிறது. எனவே இந்ததிட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள மாணவ-மாணவிகளின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.