தி.மு.க.வின் மனிதநேயம் தாய் தந்தையை இழந்து தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

சென்னை, அக். 18-   அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் நலன் கருதி நிவாரணம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார் பில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டுக்கு ரூ.11 கோடியே 17லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 810 விண்ணப்பங்கள் கடந்த 1ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பிலான காப்பீடு பத்திரம் சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இது போக மீதம் ரூ.5 கோடியே 23 லட்சம் நிதி இருக்கிறது. எனவே இந்ததிட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள மாணவ-மாணவிகளின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *