கல்வி, விவசாயம் சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு இந்தியன் வங்கி அளிக்கும் கடன் சேவை அதிகரிப்பு

சென்னை, அக்.17- மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயம், சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக கடன்கள் இந்தியன் வங்கி அளித்துள்ளது என இவ்வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிறீ.பினோத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியன் வங்கியின் 2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகளை நேற்று (16.10.2025) அதன் தலைமையகத்தில் வெளியிட்டு அவர் கூறியதாவது:

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டை விட 12.34 சதவீதம் உயர்ந்து ரூ.13.97 இலட்சம் கோடியாக இருக்கிறது. நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 17.24 சதவீதம் உயர்ந்து ரூ.5,991 கோடியாக பதிவாகியிருக்கிறது. வர்த்தகம், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இவ்வங்கி வழங்கும் கடன்கள் முந்தைய ஆண்டை விட முறையே 18.58 சதவீதம், 13.98 சதவீதம் மற்றும் 14.10 சதவீதம் என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டை விட வீட்டுக்கடன் 12.68 சதவீதம் என செப்டம்பர் 25இல் அதிகரித்திருக்கின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன்கள் முறையாக சரிப்பார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நெகிழ்வுத்திறனுடன் இவ்வங்கி சிறப்பாக இயங்கி வருகிறது. வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டமைத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குதல் ஆகியவற்றில் எமது சிறப்பு கவனம் தொடர்ந்து வலுவாக இருக்கிறது. புத்தாக்க முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலமும், நிதிச்சேவைகளை குறைவாகப் பெறும் பிரிவினருக்கும் இவ்வங்கி சேவைகளை விரிவு படுத்துவதன் மூலமும், எங்களின் நீண்ட கால வெற்றிக்கான அடித்தளத்தை நாங்கள் மேலும் வலுப்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *