செய்திக் கட்டுரை பற்றிய திருத்தம் மற்றும் கூடுதல் விளக்கம்

1 Min Read

14.10.2025 அன்று ‘விடுதலை’ ஏட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்த கட்டுரையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிட முயற்சித்ததாக வந்த செய்தி முழுமை அல்ல; உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் ஸநாதனத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு வழக்குரைஞர் செருப்பை வீசிவிட்டார் என்பதுதான் முழுமையான செய்தி. செருப்பை வீசியவர் தான் மனதில் நினைத்ததை செயலில் காட்டி விட்டார். குற்றவியல் சட்டத்தில் நடந்துவிட்டது ஒரு குற்றம் என்பதற்கு இரு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது நியதி. குற்றத்தை செய்ய நினைக்கும் மனநிலை (Mens rea) என்பது முதல் கூறு; மனதில் நினைத்ததை செய்து முடிப்பது (Actus reus) என்பது அடுத்த கூறு. உச்சநீதிமன்ற நீதிபதி மீது செருப்பை வீசிட நினைத்ததும், செருப்பை வீசியதும் ஆகிய இரண்டு கூறுகளும் சேர்ந்து செருப்பை வீசிய ஸநாதன வழக்குரைஞர் செய்தது குற்றம் என்பதை உறுதி செய்கிறது.

ஆனால் செருப்பை வீசிய வழக்குரைஞரைப் பிடித்து விசாரணை செய்து அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதியாமல் விடுவித்து விட்டனர். இதுதான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியவர் மீது எடுக்கப் பட்ட குற்ற நடவடிக்கை. நாட்டோரே அறிந்து கொள்வீர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *