அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைவு

1 Min Read

அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைந்துள்ளது. அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்திய மற்றும் சீன மாணவர்கள்தான் அமெரிக்காவின் பன்னாட்டு மாணவர் எண்ணிக்கையில் பெரும்பங்கு வகிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில், மூன்றில் ஒருவர் இந்தியர், அய்ந்தில் ஒருவர் சீனர் உள்ளனர்.

சமீபத்தில் 19 நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையும், வெளிநாட்டு மாணவர்களிடையே ஒருவிதமான பயத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியது. மாணவர் விசா விண்ணப்பங்களை மிகக் கடுமையாகச் சரி பார்ப்பது. அவர்களின் சமூக ஊடகப் பதிவுகளைக் கூட தீவிரமாகக் கண்காணிப்பது, விசா வழங்கும் முறையில் ஏற்படும் தாமதம் உள்ளிட்டவை அமெரிக் காவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை வரலாறு காணாத அளவுக்குச் சரித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *