கல்வி ஒரு சிலரின் சிறப்புரிமை ஆதிக்கமா? ராகுல் காந்தியின் சமூக நீதிக் கேள்வி

1 Min Read

புதுடெல்லி, அக்.13 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி ஆகிய 4 தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

இந்நிலையில், பெரு கத்தோலிக்க பல்கலைக்கழகம், சிலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் மாணவர்களுடன் உரையாடியபோது எடுக்கப்பட்ட காணொலி காட்சியை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

கல்வி என்று வரும்போது, அது ஆர்வம், வெளிப்படையாக சிந்திக்கும் சுதந்திரம், அரசியல், சமூக அச்சமின்றி கேள்வி கேட்பது ஆகியவற்றுடன் தொடங்குகிறது. சுதந்திரத்தின் அடித்தளமான கல்வி, ஒரு சிலரின் சிறப்புரிமை ஆகக்கூடாது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், சிந்தனையை ஊக்குவிக்கும், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறை இந்தியாவுக்கு தேவை. அதற்கு பெரு அல்லது அமெரிக்காவுடன் கைகோர்ப்பது முன்னேற்றத்துக்கான வழியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *