தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கிடவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம்,என பெயர் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று (08.11.2023) சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் வழக்குரைஞர் செயற்பாட்டு குழு சார்பில்நடைபெற்ற “உயர்நீதி மன்றத்தில் தமிழ்” என்ற தொடர் முழக்க கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.கிரிராஜன் கலந்து கொண்டு உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரை ஞர்கள் கலந்து கொண்டனர்.