வாசிங்டன், அக்.11- உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
புதினுக்கு கடிதம்
அதில் குறிப்பாக உக்ரைன், ரஷ்யா போரால் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து ரஷ்யாவில் பாதிகாப்பு முகாம்களில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா டிரம்ப், கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், போரால் பாதிக்கப்பட்டு தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்த குழந் தைகளை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மெலனியா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளி கையில் மெலனியா டிரம்ப் நேற்று (10.10.2025) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒரு குழந்தையின் மதிப்புக்கு எல்லைகள் இல்லை, கொடிகள் இல்லை. பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் நிறைந்த எதிர்காலத்தை நமது குழந்தைகளுக்கு நாம் உருவாக்கித் தர வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் புதினுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு நிறைய முன்னேற்றங்கள் நடந்துள்ளன. எனது கடிதத்திற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ரஷ்யாவில் வசிக்கும் உக்ரைனிய குழந்தைகள் தொடர்பான விவரங்களை கோடிட்டுக் காட்டினார். கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் குறித்து அதிபர் புதினும், நானும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன.
போரால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ரஷ்யாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் பாதுகாப்பாக மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதற்காக, புதினின் குழுவுடன் எனது பிரதிநிதி நேரடியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 8 குழந்தை களுக்கும் ரஷ்யாவில் வழங்கப்பட்ட மருத்துவ, சமூக மற்றும் சுகாதார உதவிகள் குறித்த விரிவான அறிக்கைகளை ரஷ்ய அரசாங்கம் என்னிடம் வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக எனக்கு இது மிகவும் முக்கியமான முன்னெடுப்பாகும்.
போரால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் உடல்நலம் தொடர் பான தகவல்கள் வெளிப் படையாக கிடைப்பதையும், பிரிந்து சென்ற குழந்தைகள் மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணையவதையும் உறுதி செய்வதே எனது திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க ரஷ்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.