பீகார் சட்டமன்றத் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

பாட்னா, அக்.11- 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ஆம்தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து சுயேச்சை யாக போட்டியிடும் போட்டியிடும் வேட்பா ளர்கள் ஒருசிலர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆளும் தேசிய ஜனநாய்க கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு முடிவடையாததால் அவர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பீகாரில் 7.43 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 14 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *