பாட்னா, அக்.11- 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ஆம்தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து சுயேச்சை யாக போட்டியிடும் போட்டியிடும் வேட்பா ளர்கள் ஒருசிலர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆளும் தேசிய ஜனநாய்க கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு முடிவடையாததால் அவர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பீகாரில் 7.43 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 14 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது
Leave a Comment