இஸ்ரேல் பிரதமரைப் பாராட்டிய பிரதமர் மோடிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை, அக்.11-  இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:  காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப் படுகொலையும் உலகம் முழுவதும் கண் டனத்துக்கு உள்ளாகி வருகிறது.  இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி யிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமையின் விளை வாகும்’ என்றும் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இனப் படுகொலை செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை இவ்வாறு பாராட்டுவது, இந்தியாவின் பாரம் பரியமான மனிதநேய வெளியுறவுக் கொள் கைக்கு எதிரானது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளரைப் புகழ்வது, அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு கடுமை யான அவப்பெயரை உண்டாக்கும். இந்தியா மீது உலகநாடுகள் வைத்திருக்கும் நல்லெண் ணத்தைக் கெடுக்கும் செயலாகும்.

கண்டனம்: இந்தியாவின் குரல் எப்போதும் மனிதநேயம், அமைதி, நீதிக்காக இருக்க வேண்டும். இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அல்ல.  எனவே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *