ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் அய்க்கிய ஜனதா தளம் மேனாள் எம்.பி. பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

பாட்னா, அக்.11 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அய்க்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

அதேவேளை, நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சந்தோஷ் குஷ்வாலா. இவர் அக்கட்சியின் பூர்ணியா தொகுதி மேனாள் எம்.பி. ஆவார்.

இந்நிலையில், சந்தோஷ் குஷ்வாலா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. கிரிட்ஹரி மற்றும் மேனாள் எம்.பி. ஜக்தீஷ் சர்மா ஆகியோரின் மகன்களான சாணக்ய பிரகாஷ் ராஜன், ராகுல் சர்மா ஆகியோரும் இன்று ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு பீகார் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *