கடவுளின் யோக்கியதை இதுதானா! கடவுள் சொல்லி தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது வழக்குரைஞர் செருப்பை வீசினாராம்

2 Min Read

புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், அன்றைய தினம் நீதிமன்றம் சென்றது ஏன் என்பது குறித்து உரிய பதிலளிக்க முடியாமல் திணறினார்.

மேலும், இவ்வாறு செய்யுமாறு பர மாத்மாதான் சொன்னார், பரமாத்மா சொன்னதைத்தான் செய்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

வழக்குரைஞர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ராகேஷ் கிஷோர், ஊடகங்களிடம் பேசுகையில், தன்னுடைய செயலுக்கு எந்த வருத்தமும் அடைந்தது போல தெரியவில்லை.

கடந்த திங்கள்கிழமை (6.10.2025) உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞரை, நீதிமன்ற காவலர்கள் தடுத்து நிறுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். நேற்று காலை அவரது வீட்டு முன் ஏராளமானோர், இந்த சம்பவத்துக்குக் கண்டம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால், ராகேஷ் கிஷோரின் இந்த செயல்பாடு, அவரது அக்கம் பக்கத்தினருக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம் அவர்களில் பலரும், ராகேஷின் மோசமான செயல்பாடுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களாம்.

ஷஹ்தாரா நீதிமன்றம் மற்றும் டில்லி நீதிமன்றத்தில் பல ஆண்டு களாக வழக்குரைஞராக பணியாற்றி வரும் ராகேஷ், நீதிபதி மீது காலணி வீசியதை, தான் கடவுள் சொன்னதைத்தான் செய்தேன் என்று கூறியிருப்பதுதான் மேலும் சர்ச் சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்றைய தினம், நீதிமன்றத்துக்கு ஏன் சென்றீர்கள் என்று ஊடகத்தினர் கேட்கும்போது, இறைவன்தான் சொன்னார் என்றும், ஒருவேளை, பர மாத்மா மீண்டும் என்னை அவ்வாறு செய்யச் சொன்னால் மீண்டும் அதைச் செய்வேன் என்று, ஏற்கனவே தான் செய்த செயலுக்கு எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் கூறுகிறார்.

அவர் வாழும் பகுதியில் ஏற்க னவே பலரும் இவரால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், காவல் நிலையத் தில் பலர் இவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து வாட்ஸ்ஆப் குழுவை நடத்தி வருவதாகவும், அதில் மதம் மற்றும் சமூகம் தொடர்பான தகவல் களையே அவர் அனுப்பி வருவதாக வும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *