சபரிமலை அய்யப்பனின் பரிதாப நிலை துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவச முறைகேடு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, அக்.8- சபரிமலை துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்க முலாம் புதிய கவசங்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவார பாலகர் சாமி சிலைகள் உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால்,கவசத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த கவசத்தின் எடை 42.800 கிலோவாக இருந்தது. பணிகள் முடிந்து சபரிமலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டபோது, எடை குறைவாக இருந்தது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அப்போது தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த விவகாரத்தை விசாரிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு, விஜிலென்ஸ் குழுவுக்கு உத்தரவிட்டது.

புலனாய்வு

இந்த வழக்கு நேற்று (7.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டுவின் விஜிலென்ஸ் குழு இந்த விவகாரத்தில் அதன் முதல் கட்ட விசாரணையின் இடைக் கால அறிக்கையை சமர்ப் பித்தது. அதில் சபரிமலை கோவிலில் நடந்தது கொள்ளை என்று குறிப்பிடப் பட்டு இருந்தது.

முன்னதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு விஜிலென்ஸ் குழு உன்னிகி ருஷ்ணனிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றம், காவல்துறை கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது. மேலும் சைபர் காவல்துறை அதிகாரிகளும் குழுவில் இடம்பெறுவர். இதுகுறித்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட வேண்டும். அறிக்கைகளை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

சட்டசபையில் அமளி

கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை குழுவை அமைக்கும் உத்தரவை சபரிமலை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்றுள்ளார். ஏற்ெகனவே கடந்த வாரம் சபரிமலை தங்ககவசங்கள் எடை குறைந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இதற்கிடையே கேரள சட்டமன்றத் தில் சபரிமலை அய்யப்பன் கோவி லின் தங்க முலாம் பூசப்பட்ட கவ சங்கள் எடை குறைந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடு பட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவி விலக வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். இதனால் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *