நூறாம் பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான   லட்சுமிகாந்தன் பாரதி அய்.ஏ.எஸ் அவர்கள் நூறாம் பிறந்தநாள் காணுவதை அறிந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக நேற்று  (7.10.2025) அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழர் தலைவரின் குரல் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்தார்  லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் அவரைச் சென்று சந்தித்து வாழ்த்த விருப்பம் தெரிவித்தபோது, தானே வந்து ஆசிரியர் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றார். அதனை அன்போடு மறுத்து, தான் நேரில் வருவதாகத் தெரிவித்தார் ஆசிரியர்.

தனித்தன்மையுடனும், நேர்மையுடனும் தனது பணிக்காலத்தில் செயலாற்றிய பெருமைக்குரியவர் என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து திரு.லட்சுமி காந்தன் பாரதி அவர்களை ஆசிரியர் பாராட்டினார். அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க வருவோரைக் காத்திருக்க வைக்காமல், எத்தனை மணிக்குச் சந்திக்கலாம் என்பதை அறிவிப்பாக மாட்டி வைத்த பாங்கைப் பொருத்தமாக நினைவுகூர்ந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *