இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்ட அய்.நா.தீர்மானம்

கொழும்பு, அக்.8  இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் 6.10.2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள் ளப்பட்ட இந்த தீா்மானம் இலங் கையில் மனித உரிமைகள் ஆணை யரின் பணிகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வழிவகுத்தது.

அந்த தீா்மானத்தில் கூறப்பட்டி ருப்பதாவது:

இலங்கையில் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ள மாகாண கவுன்சில் தோ்தல்களை விரைந்து நடத்தி அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தின்படி செயல் படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுகளுக்கு எதிராக தற் போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டு வதோடு மேலும் அதிகரிக்க வலியுறுத்தப்படுகிறது. தமிழா்கள் மற்றும் முஸ்லிம்களை கைதுசெய்ய தவறாக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் கருத்துரிமைச் சட்டங்களை பாதுகாத்து அதில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

பல புதைகுழிகளை தோண்டி ஆய்வு நடத்த பன்னாட்டு அளவில் நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசு முன்கூட்டியே கோர வேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த கடுமையான உரிமை மீறல் வழக்குகளை மீண்டும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள சுயாதீன அமைப்பை ஏற்படுத்தும் அரசின் முடிவு வரவேற்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இலங்கை யில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை இந்த தீா்மானம் வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

வரவேற்பும்-எதிர்ப்பும்

இந்த தீா்மானத்தை வரவேற்று தமிழ் தேசிய கூட்ட மைப்பு கட்சியின் செய்தித் தொடா்பாளா், ‘பன்னாட்டு கண்காணிப்பை மேலும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டதை வரவேற் கிறோம். 2012-இல் இருந்து இதுபோன்ற பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் 16 ஆண்டுகள் கடந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது’ என்றார்.

மனித உரிமைகள் ஆணையரின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை நீட்டிக் கப்பட்டதற்கு அய்.நா.வுக்கான நிரந்தர இலங்கை தூதா் கண்டனம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *