உத்தரப்பிரதேச பிஜேபி அரசின் மத வன்மம்: பதாகை வைத்ததால் முஸ்லிம் மதத்தலைவர் கைது

லக்னோ, செப். 29- உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மிலாது நபியை  முன்னிட்டு, இம்மாத தொடக்கத் தில் ‘அய் லவ் முகமது’ என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக உ.பி. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை (எப் அய்ஆர்) பதிவு செய்தனர்.

இதைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலாக இந்து அமைப் பினர்’அய் லவ் மகாதேவ் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில்  பேரணி 26.9.2025 அன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியில் சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசி யதால் வன்முறை ஏற்
பட்டது.

இந்தப் பேரணியில் வந்தவர் களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதில் ஏற் பட்ட மோதலில் 10 காவல்துறையினர் காயமடைந்தனர்.

இதுதொடர் பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்
ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் 1,700 பேர் மீது வழக்குகளை காவல்துதுறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் போரா ட்டங்களுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் மதத்தலைவரும், இத் தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகிர் ராசாவை  காவல்துறையினர் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *