மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்

செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக     சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில்   மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் வி.பன்னீர்செல்வம், தி.செ.கோபால், க. இறைவி, நூர்ஜஹான், அருணா, சவுந்தரி, செம்பியன், நரசிம்மன், கருணாகரன், சமத்துவமணி, சகாயம்ராஜ், பொன். ராஜேந்திரன், முருகன், திருக்குறள் வெங்கடேசன், மோகன்ராஜ், குணசேகரன், முடியரசன், அறிவுச்சுடர், மெடிக்கல் வெங்கடேஷ், செங்கை சுந்தரம், அருண்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொது மக்களும், வர்த்தகர்களும்   வழங்கிய  – கடை வீதி வசூலாக  ரூ.30,015 கிடைத்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *