தமிழர் தலைவருடன் டாக்டர் பரகலா பிரபாகர் சந்திப்பு

நாடறிந்த பொருளாதார வல்லுநரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் பரகலா பிரபாகர், சென்னை பெரியார் திடலுக்கு இன்று (28.9.2025) வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிச் சென்றார். இருவரும், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றிடும் வழிமுறைகள் குறித்தும், இளைஞர் சமுதாயத்திடம் நாட்டில் நடைபெறும் அரசியல் சீரழிவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினர். பெரியார் அருங்காட்சியகத்தினை  டாக்டர் பரகலா பிரபாகர் அவர்களுக்கு சுற்றிக் காண்பித்து கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பு உரையாடலின் பொழுது கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இரா. விஜயசங்கர் மற்றும் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

(சென்னை – 28.9.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *