மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைக்க சட்டம் பீகாரில் ராகுல் காந்தி வாக்குறுதி

பாட்னா, செப்.25 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

பீகார் தலைநகா் நேற்று (24.9.2025) பாட்னாவில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீதி கிடைக்க உறுதிமொழி’ என்ற பெயரில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசுகையில், பீகாரில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

ரூ.25 கோடி வரை மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்டோருக்கு ஒட்டுமொத்தமாக 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். அண்மைக்காலமாக  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப் பினருடன் காங்கிரஸ் கலந்துரை யாடியதன் விளைவாக இந்த வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன’ என்றார்.

கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே பேசு கையில், ‘கடந்த ஆண்டு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் சோ்ந்தார். இது ஜாதிவாரி படிநிலையை அவா் ஆதரிப்பதை எடுத்துரைக்கிறது’ என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியில் சேர நிதீஷ் மீண்டும் முன்வந்தால், அவரை கூட்டணியில் சோ்க்க வேண்டாம் என்று கருத்தரங்கில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவிடம் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *