விஎச்பியின் மதவிரோத சர்ச்சை பேச்சு: நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லையாம்!

1 Min Read

சிவசேனா எம்பி கண்டனம்

புதுடில்லி, செப்.24 வட மாநிலங்​களில் நவராத்​திரி நாள்களில் கர்​பா, தாண்டியா எனும் கோலாட்டங்​கள் நடை​பெறுவது வழக்கம். உத்​தரப்பிரதேசம், மத்​தியப் பிரதேசம், ராஜஸ்தான்,  மகாராராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

இந்துக்கள் அல்லாதோர்

இந்​நிலை​யில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) தேசிய செய்​தித் தொடர்​பாளர் சிறீராஜ் நாயர் வெளி​யிட்ட அறி​விப்​பில், “கர்பா என்​பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழி​பாட்​டின் ஒரு வடிவம். சிலை வழிபாட்டில் நம்​பிக்கை இல்​லாதவர்​கள் இவற்​றில் பங்​கேற்க உரிமை இல்​லை. இது​போன்ற நிகழ்வுகளில் இந்​துக்​கள் அல்​லாதோர் இருப்​பது எங்​கள்  மத உணர்​வு​களை புண்​படுத்​துகிறது” என்று கூறி​யுள்​ளார்.

விஎச்​பி​யின் உ.பி. மாநில செய்​தித் தொடர்​பாளர் வினோத் பன்​சால் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘இந்து சமூகம் விழிப்​புடன் உள்​ளது. கர்​பா, தாண்​டியா நடன கூட்​டங்​களில் ஊடுருவுபவர்​கள் லவ் ஜிஹாத், மதமாற்​றம் போன்ற சதித் திட்​டங்​களுக்கு முயற்​சிக்​கின்றனர். இது தொடர்​பாக இந்​துக்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். உள்ளே நுழைபவர்​களின் ஆதார் உள்​ளிட்ட அடை​யாள அட்​டைகளை சரி​பார்ப்​பதுடன், நெற்​றி​யில் தில​கம் பூச வேண்​டும்’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

இதுகுறித்து சிவசேனா (உத்​தவ்) எம்​.பி. சஞ்​சய் ராவத் கூறுகை​யில், “நாட்​டில் வகுப்​பு​வாத சூழலை உருவாக்க முயற்​சிகள் நடை​பெறுகின்​றன. இது அனைத்து மதத்​தினரின் வாழ்​வா​தா​ரம். இந்த வகை​யான விஷம் மகா​ராட்டி​ரா​வுக்கோ அல்​லது நாட்​டுக்கோ நல்​லதல்ல” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *