பகுத்தறிவுப் பகலவன் சிலை நிறுவ- நகராட்சி நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

அரசியல்

ராமநாதபுரம், மே 29 ராமநாதபுரத்தில் 27.5.2023 அன்று மாலை 6 மணிக்கு கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர்  கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார். 

மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், ராமநாதபுரம் நகர தலைவர் பழ.அசோகன் ,  பொதுக்குழு உறுப்பினர் கயல் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஈரோடு பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது எனவும், 

ராமநாதபுரம் மாவட் டத்தில் மாதம் ஒருமுறை மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடத் துவது எனவும்,    

மாவட்டத்தில் கழகப் பேச்சாளர்களை வைத்து மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

‘விடுதலை’, ‘உண்மை’  சந்தாதாரர் களை சந்தித்து புதுப் பித்தல் செய்வது என முடிவு செய்யப்படுகிறது. 

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேது சமுத் திரக் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க ஒன்றிய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ராமநாதபுரம் நகரில் திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை நிறுவுவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *