வாக்காளர் பதிவு பிரச்சினை சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

1 Min Read

புதுடில்லி, செப்.13- இத்தாலியை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கடந்த 1983-ம் ஆண்டுதான் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால் 1980ஆம் ஆண்டிலேயே டெல்லி தொகுதியில் அவர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு எதிராக டில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி வழக்கு தொடர்ந்தார். இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாக்காளராக பதிவு செய்தது சட்ட விரோதம் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு  11.9.2025 அன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பவன் நரங், ஒருவர் முதலில் குடியுரிமைக்கான வரம்பை பூர்த்தி செய்த பின்னர்தான் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என வாதிட்டார்.

வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வைபவ் சவுராசியா தள்ளுபடி செய்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *