ஓசூர் சிப்காட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 Min Read

ஓசூர், செப்.12 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மல்டிலேயர் மற்றும் எச்.டி.அய். பிரிண்டட் சர்கியூட் போர்ட்ஸ் எனும் புதிய உற்பத்தி தொழிற் சாலையை தொடங்க உள்ளது.

இதேபோன்று ஓசூர் சிப்காட் குருபரபள்ளி தொழிற்பூங்காவில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் ரூ.450 கோடி முதலீட்டில் 2 புதிய விரிவாக்க திட்டங்களை செயல்படுத்த உள்ளது.. புதிய தொழிற்சாலை மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) அடிக்கல் நாட்டினார். மேலும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி பிரிவையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும். தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் இதுபோன்ற விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் திறன் வளத்தை கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யத்தை சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தி.மு.க. அரசு முழுமையாக வழங்கும் என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *