கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத்தொகை: எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

1 Min Read

சென்னை, செப். 8- தொடக் கக் கல்வி இயக்குநரகம், கிராமப்பு றங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகளின் கல்வி இடைநிற்ற லைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்தத் திட்டப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்பு அலு வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவரப் பதிவேற்றம்: எமிஸ் (EMIS) தளத்தில் விடுபட்ட மாணவிகளின் விவரங்களை வரும் 10-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம்.60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண்.45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்கள். இந்த விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் மாணவி களுக்கு ஊக்கத்தொகை விரைவாகக் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *