புதிய சட்டத்தால் நிதி நெருக்கடி 60 சதவீத ஊழியர்களை நீக்க பிரபல நிறுவனம் முடிவு

1 Min Read

புதுடில்லி, செப்.3- சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் இணைய வழி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து ட்ரீம் 11, எம்.பிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் எம்.பி.எல் நிறுவனம் இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

இலவசமாக விளையாடக்கூடிய விளையாட்டுகளில் இனி கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளதாகவும் அமெரிக்க சந்தைகளில் வணிகத்தை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் எம்.பி.எல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங், நிதி, செயல்பாடுகள், லீகல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் என்ணிக்கை தோராயமாக 300 முதல் 500 வரை இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *