வியட்நாமின் தேசிய நாள் கொண்டாட்டம் 14,000 சிறைக்கைதிகள் விடுதலை

1 Min Read

ஹனோய், ஆக. 31– வியட்நாமின் தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாடு சுமார் 14,000 சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளது. விடுவிக்கப்படவுள்ளவர்களில் 18 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டு கைதிகளும் அடங்குவர். இந்த ஆண்டு விடுதலை செய்யப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, வியட்நாமின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகம் என்று பொதுப் பாதுகாப்புக்கான துணை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, வட வியட்நாம் சைகோன் மாநிலத்தைக் கைப்பற்றியதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 8,000-க்கும் அதிகமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்தவர்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். 2009 ஆம் ஆண்டு முதல், வியட்நாம் சுமார் 100,000 சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *