கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.8.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*திமுக தலைவராக எட்டு ஆண்டுகள்: இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவையும் பலத்தையும் தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தலைவர்கள் புகழாரம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு வகையில் தான் தீர்வு காண முடியும். ஆளுநருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்து உத்தரவு கோர முடியாது என ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “மோடி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய வாக்கு திருட்டு பிடிபட்டுவிட்டது, இப்போது அவரால் தப்பிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.” என ராகுல் காட்டம்.

தி இந்து:

*சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

தி டெலிகிராப்:

* ஆளுநர்கள் மசோதாக்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தால், பிரிவு 200 இல் உள்ள ‘முடிந்தவரை விரைவில்’ என்ற சொல் அர்த்தமற்றது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கருத்து.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *