மராட்டியம், கருநாடகாவை தொடர்ந்து பீகாரிலும் வாக்கு திருட முயற்சி : ராகுல் குற்றச்சாட்டு

1 Min Read

கதிகார், ஆக.24 காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் வாக்காளர் உரிமைப் பயணம் நடத்தி வருகிறார். இதில் கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார்.

அவர் கூறுகையில், ‘அதிகாரத் தையும் செல்வத்தையும் குவிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் பா.ஜனதா, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான் மையினருக்கான வாய்ப்புகளின் கதவுகளை மூடியிருக்கிறது. பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்த அவர்கள் விரும்பவில்லை’ என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், ‘எனவே மக்களின் வாக்குகளை திருட முயற்சிக்கிறார்கள். அந்தவகையில் கர்நாடகா, மராட்டியம், அரியா னாவில் முன்பு வாக்குகளை திருடி னார்கள். தற்போது பீகாரிலும் அதை முயற்சிக்கிறார்கள். எனவே நாங்கள் இந்த வாக்காளர் உரிமைப் பயணத்தை  நடத்துகிறோம்’ என் றும் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *