செய்யாறில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

செய்யாறு, ஆக.21- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆரணி கூட்ரோடில் 18.8.2025 மாலை 6.30 மணியளவில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன், செயலாளர் என்.வி.கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் தொடக்கவுரை ஆற்றினார்.

திராவிடர் கழக சொற் பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றுகையில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல் பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு பற்றி விரிவாக பேசினார்.

நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராசன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர், சேத்துப்பட்டு அ.நாகராஜன், சென்னை அரும்பாக்கம் தாமோதரன், பொக்கை சமுத்திரம் பி.பரந்தாமன், சிறுநல்லூர் து.சின்னதுரை, நகர செயலாளர் என்.சீனுவாசன், பெருங்களத்தூர்
இரா.சிவக்குமார் ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *