கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

1 Min Read

18.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேடு நாடு முழுவதும் அரங்கேறிய வாக்கு திருட்டு: பீகாரில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

* தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று டில்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் சந்திப்பு.

தி இந்து:

* தமிழ்நாடு ஆளுநர் எதிர்க்கட்சியை விட ‘மலிவான அரசியலில்’ ஈடுபடுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

தி டெலிகிராப்:

* ‘எங்களுக்கு அனுப்பப்பட்ட டிஜிட்டல் ரசீது உண்மையானது என்று கூறும் பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பதிலடி.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *