திருத்தணி முருகன் என்ன செய்கிறான்? பக்தர்களிடம் ஒன்பது பவுன் நகை திருட்டு!

1 Min Read

சென்னை, ஆக.17– திருத்தணி முருகன் கோவிலில் நேற்று  (16.8.2025) ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சென்னை கலைஞர் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (வயது 38) என்பவரது 3 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

இதேபோல் பூவிருந்த வல்லி வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா (55) என்பவரிடம் 3 பவுன் நகை திருடப் பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (50) வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் 3 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகை திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *