இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 80 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, ஆக.8- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 6.8.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கையில் காவலில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உட னடியாக விடுவிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விடுவிக்க நடவடிக்கை

இலங்கைக் கடற்படையினரால் 6-ஆம் தேதி அதிகாலை இந்திய மீனவர்கள், 14 பேர் அவர்களது எந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும். இதுகுறித்து தான் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. இந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில்,இது 17-ஆவது சம்பவம். தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருக்கின்றனர். மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ்நாட்டு மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடு விப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *