ஹாங்காங்கில் வரலாறு காணாத மழை

1 Min Read

ஹாங்காங், ஆக 6–  ஹாங்காங்கில் இன்று காலை பெய்த வரலாறு காணாத கடும் மழையின் காரணமாக, புயலுக்கான உச்சபட்ச “கருப்பு” எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த அசாதாரணச் சூழல் காரணமாக, மருத்துவமனை வார்டுகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் மூடப்பட்டன. எனினும், மருத்துவமனைகளின் விபத்து மற்றும் அவசரப் பிரிவுகளில் மட்டும் தொடர்ந்து சேவைகள் வழங்கப்பட்டன.

அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று காலையில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 9,837 முறை மின்னல் தாக்கியுள்ளது. ஹாங்காங் மற்றும் அருகிலுள்ள சீனாவின் குவாங்சோ (Guangzhou) நகரில் மணிக்கு 90 மில்லிமீட்டர் வரை மழை பதிவானது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *