ராஜஸ்தான் பிஜேபி முதலமைச்சர் ‘கடவுள்’ கிருஷ்ணனை வேண்டியதும் மழை கொட்டுகிறதாம்

1 Min Read

அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கடும் விமர்சனம்

ஜெய்ப்பூர், ஆக.4- ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.

அந்த ஆற்றில் மழைக் காலங் களில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடு களுக்கு உள்ளேயும் புகுந்துவிடுகிறது. துர் நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று (3.8.2025) பார்மர் பகுதிக்கு சென்ற ராஜஸ் தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் கே. கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:-

பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதலமைச்சர், பகவான் கிருஷ்ணரை வேண்டும்போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்தி ரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக் கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.கே.விஷ்ணோயின் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ஹரிஷ் சவுத்ரி விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச் சினையின் பொறுப்பை கடவுள் மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. அமைச்சர், பிரச்சினையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சி னையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனை யால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *