சாமியார்களின் ஆபாச அட்டகாசம்

2 Min Read

காஜியாபாத், ஆக.4 முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் (Changing Room) ரகசியமாகப் பல இடங்களில் காட்சிப்பதிவு கருவிகள் (CCTV Cameras) பொருத்தப்பட்டு, அவை வெளிநாட்டு ஆபாச இணையதளங்களுக்கு நேரடியாக ஒளிபரப் பப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டு பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் சம் பவம் வெளிவந்ததும், மடத்தின் தலைவரான பார்ப்பனச் சாமியார் முகேஷ் கோஸ்வாமி (Mukesh Goswami) தலை மறைவாகிவிட்டார்.

அண்மைக் காலமாக, பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் ஆபாச காணொலிகளை வழங்கும் இணையதளங்களில் அதிக அளவில் பரவி வந்தன. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்களின் காணொலிகளும் அடங் கும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையின் சோதனையின்போது, அனைத்துக் காணொ லிகளும் ஒரே இடத் தில் பதிவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் முராத் நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத் திற்குச் சென்று, ஆற்றில் குளித்துவிட்டு அதன் உடை மாற்றும் அறையைப் பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, உடை மாற்றும் அறையைச் சோதித்தபோது, அங்கு மிகவும் நவீனமான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பல ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தக் கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு (Live Feed), கோயில் தலைமை மதகுருவாக இருக்கும் மகந்த் முகேஷ் கோஸ்வாமியின் அலை பேசியில்  இருந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் மகந்தின் அலைபேசியை சோதித்தபோது, அதில் பெண்கள் உடை மாற்றும் பல காட்சிப் பதிவு தொகுப்புகள் கண்டெ டுக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் மடத்தில் உள்ள சாமியார்களையும் ஊழியர் களையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, மகந்த் முகேஷ் கோஸ்வாமி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாக ிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு கங்கை கரையில் குளித்து விட்டு உடைமாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த தற்காலிக கூடாரத்திலும் இந்தச்சாமியார் இதே போன்று காமிராவை வைத்து பிடிபட்டு அடி பட்டார். அந்த வழக்கில் மாநில காவல்துறை அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மன்னிப்பு கடிதம் வாங்கி அவரை விட்டுவிட்டது  மேலும் அந்த கூடாரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.

இதனால் தனது மடத்திலேயே புதிதாக ஆடை மாற்றும் அறையை கட்டி இந்த அசிங்கமான வேலையை அந்தப் பார்ப்பனச்சாமியர் செய்து வந்துள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *