கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 11– மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் 9.6.2023 அன்று பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாது ராம் கோட்சே இந்தியாவின் மரியா தைக்குரிய நபர்; அவர் பாபர், அவுரங் கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகை யால் தங்களை பாபர், அவுரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள் பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறி இருக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே ஹிந்துத்துவ சனாதன சக்திகள் காந்தியாரைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந் தையாக இருந்த சாவர்க்கர் போன் றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்ட னத்துக்கு உரியது.

காந்தியாரைக் கொன்ற கோட் சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *