சட்டீஸ்கரில் கல்வியின் அவலம்! அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாத பார்ப்பன ஆங்கில ஆசிரியர்

1 Min Read

ராய்ப்பூர்,  ஜூலை 28 அரசு பள்ளியில் தகுதி யற்ற ஆசிரியரால் மாணவர்களின் கல்வி பாதிப்பு – சமூக நியாயம் கேள்விக்குறியாகி உள்ளது.

கல்வித்துறை ஆய்வாளர்

பாஜக ஆளும் மாநிலமான சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அரசு பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் சுரேஷ் தீக்‌ஷிக் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், கல்வித்துறை ஆய்வாளர் வகுப்பறைக்குச் சோதனை நடத்த சென்றுள்ளார்.

ஆய்வாளர், அந்த ஆசிரியரிடம் ‘‘சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் ராஜ்னூர் தகசில், 19 ஆவது அவின்யு’’ என்ற முகவரியை ஆங்கி லத்தில் எழுதும்படி கூறியுள்ளார்

அவரோ, ‘‘Night im Alloyn-NING IN AIVENE NINITHIN’’ என்று தவறாக மூன்று முறையும் எழுதியுள்ளார். இவரது தகுதி யின்மை தெரிந்தும் சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு இவரை நியமிப்பதற்குப் பின்னால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மாணவர்களுக்கு கல்வி சென்று சேர வேண்டாம் எனும் மனுவாதி சிந்தனையே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

பார்ப்பனர் என்பதற்காக மட்டும் வேலை, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் பெறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், அரசின் கல்விக் கொள்கை மற்றும் சமூக நியாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *