தமிழ்நாடு காவல்துறையில் ‘சப் – இன்ஸ்பெக்டர்’ பதவி காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.
காலியிடம் : எஸ்.அய்., (தாலுகா) 366, ஏ.ஆர்., 145, டி.எஸ்.பி., 110, ஸ்டேஷன் ஆபிசர் 129 என மொத்தம் 750 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 191 இடங்கள்உள்ளது.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2023 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1000.
கடைசிநாள் : 30.6.2023
விவரங்களுக்கு : tnusrb.tn.gov.in