அமலாக்க அதிகாரி பணி உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு ஆக. 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

2 Min Read

சென்னை, ஜூலை 26- ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி (UPSC), அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிகளுக்கு மொத்தம் 230 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்களுக்கு மாதம் ரூ. 1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

பணியிடங்களின் விவரம்:    அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: 156 பணியிடங்கள்    உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: 74 பணியிடங்கள் மொத்தம்: 230 பணியிடங்கள்.

கல்வித் தகுதி: அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்.

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: இளங்கலை பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும். கம்பெனி சட்டம் / தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  வயது வரம்பு (18.08.2025 நிலவரப்படி):    அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.    உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்புத் தளர்வுகள்:   எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்.   ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்.    அரசு விதிகளின்படி மற்ற பிரிவினருக்கும் தளர்வுகள் உண்டு.

ஊதிய விவரம்: அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி: மாதம் ரூ. 47,600  ₹1,51,100 வரை.    உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்: மாதம் ₹56,100  ₹1,77,500 வரை.

தேர்வு முறை: போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. (பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை).   விண்ணப்ப அவகாசம் தொடங்கும் நாள்: 29.07.2025    விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2025

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகு, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *