அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு குழப்பத்தை ஏற்படுத்திய பட்டியல்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத் துவ இடங்களின் எண் ணிக்கையை ஒன்றிய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது.

உறுதியளிப்பு

இதையடுத்து, மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இது தொடா்பாக ஒன்றிய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத் துக்கு (டிஜிஹெச்எஸ்) தகவல் அளித்தது. அதன் பேரில் அந்தத் தவறுகளைத் திருத்துவதாக ஒன்றிய சுகாதாரத் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கலைஞர் கருணாநிதி நகா் இஎஸ்அய் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அந்த வகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் என மொத்தம் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

குழப்பம்

இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங் களை மத்திய கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ண கிரி, திருப்பூா், திருவள்ளூா், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகமாகக் காட்டப் பட்டது.

இதனால் மாணவா்க ளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் ஒன்றய சுகாதாரத் தலைமை இயக்குநரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அது திருத்தியமைக்கப்படும் என அப்போது உறுதிய ளிக்கப்பட்டதாக மாநில மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரி வித்துள்ளனா்.

தற்போது நடை பெற்றுவரும் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் இணையவழியில் மாண வா்கள் கல்லூரிகளை மட்டுமே தோ்வு செய்து வருகின்றனா். இடங்களை ஒதுக்கீடு செய்ததற்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த விவகாரத்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியுள்ளனா்.

எனினும், அதுபோன்ற விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *