அமெரிக்காவில் டில்லன் நீர்வீழ்ச்சியில் விபத்து ஒருவர் பலி, இருவரைக் காணவில்லை

1 Min Read

ஆரெகன், ஜூலை 23- அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டில்லன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 19.7.2025 அன்று மதிய வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீர்வீழ்ச்சியில் விழுந்த மற்ற மூவர் டெஸ்சுட்ஸ் (Deschutes) ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் உடனடியாகப் பகுதிக்கு விரைந்து ஆளில்லா வானூர்திகள் (drones) உதவியுடன் தேடல் பணியைத் தொடங்கினர். சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

சுமார் 4.5 மீட்டர் (15 அடி) உயரமுடைய டில்லன் நீர்வீழ்ச்சி, கோடைக்காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான இடமாகும். இங்குப் பலர் படகு சவாரியும் மேற்கொள்வது வழக்கம். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *