இப்படியும் சில நிகழ்வுகள் வங்கதேசத்தில் நூதன தண்டனை திருட வந்தவரை உடற்பயிற்சி செய்ய வைத்த ஜிம் உரிமையாளர்!

1 Min Read

தாக்கா, ஜூலை 22- வங்கதேசத்தின் காக்கஸ் பஜார் பகுதியில் உள்ள ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் திருட முயன்ற ஒருவருக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘பவர்’ உடற்பயிற்சிக் கூடத்திற்குள் நுழைந்து பொருட்களைத் திருட முயன்ற அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைக்காமல், உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் அவருக்கு ஒரு நூதன தண்டனையை வழங்கினார் என ‘பாங்காக் போஸ்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருட வந்தவருக்கு  நல்ல உடல்வாகுவாக இருந்ததால், அவரைத் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வைத்தார்.

அந்த நபர் மிகவும் களைப்படைந்து தன்னை விட்டு விடுங்கள் என்று கூறிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு கட்டத்தில் கண்ணீருடன் தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சுவதும் காணொலியில் பதிவாகியுள்ளது. வன்முறை இல்லாமல் இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட உரிமையாளரை ஒரு சிலர் பாராட்டியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *