கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read

17.7.2025

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் பிரச்சினையை தீர்க்காமல், அரசியல் செய்கிறது பாஜக” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காங்கிரஸ் ஆட்சி வந்தால், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சிறைக்குப் போவார், அவரை மோடியும், அமித்ஷாவும் காப்பாற்ற முடியாது”: ராகுல் காந்தி உறுதி. பாஜக ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது என கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “திராவிட மாதிரி 2.0 நிகரற்றது – பாஜக கூட ஒப்புக் கொள்ளும்” – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, மற்றும் ‘விடியல் பயணம் திட்டம்’ ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இத்திட்டங்கள் திராவிட மாதிரி 2.0அய் சாதனையாக உருவாக்கியுள்ளன; இதற்கு பாஜக கூட மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ளும் என பேச்சு.

* பீகார் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ராகுலின் திட்டத்திற்கு முழு ஆதரவு – காங்கிரஸ் ஓபிசி குழு தீர்மானம். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜாதிவாரி மக்கள்

* எண்ணிக்கை மற்றும் ஓபிசி சமூகத்திற்கு ஆதரவு வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்திற்கு முழுமை யான ஒப்புதலையும் ஆதரவையும் தெரிவித்தது.

தி இந்து:

* வீட்டு வளாகத்தில் நாமசங்கீர்த்தனம் செய்யக்கூடாது.சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு: “சிலருக்குப் பவித்ரமான இசை போல் தோன்றும் விசயம், மற்றவர்களுக்கு தொந்தரவு தரக் கூடும்” எனக் குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், நாமசங்கீர்த்தனம் (இந்து கடவுளின் நாமங்களை கூட்டமாக பாடுதல்) வீட்டு வளாகங்களில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

* “பீகார் சட்டமன்ற தேர்தலில் 1% வாக்காளர்கள் நீக்கப்பட்டால் 35 தொகுதிகளில் முடிவுகள் பாதிக்கப்படும்” – தேஜஸ்வி: 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய பாஜக இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பயன்படுத்துகிறது என ஆர்.ஜெ.டி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* ஹரித்வார், மீரட், காசியாபாத்தில் சிவ பக்தர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும், கன்வாரியர்கள் அட்டூழியம் – காவல்துறையின் அமைதியால் கேள்விக்குறி: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல்வேறு இடங்களில் கன்வாரியர்களால் சட்ட ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளது.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *