ஜெய்ப்பூர், ஜூலை 12 ராஜஸ்தானில் தற்போது பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பள்ளிகளில் ஆசாதி கே பாத் கா ஸ்வர்னியம் பகுதி 1 மற்றும் 2 துணைப்பாடப்புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடப்புத்தகங்களில் நேரு மற்றும் காந்தியின் குடும்பத்தை பெருமைப்படுத்தும் வகையில் பாடங்கள் இருப்பதாக கூறி, அந்த துணைப்பாடப்புத்தகங்களை மாநில அரசு நீக்கி உள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், “ நேரு, காந்தி குடும்பங்கள் பற்றிய பாடங்களே உள்ளன. இதை படிப்பதால் தேர்வில் மதிப்பெண்கள் எதுவும் எடுக்க முடியாது. கல்விக்கு எந்த வகையிலும் உதவாத பாடப்புத்தகங்களை தொடர்வதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே அந்த துணைப்பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன” என தெரிவித் துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் நேரு, காந்தி பற்றிய பாடப் புத்தகங்கள் நீக்கம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books