போபால், ஜூலை 8 மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமா னம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று (ஜூலை 08) காலை 6.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-7295 விமானம் 51 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, புறப்பட்ட 30 நிமிடங்க ளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானி இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை யிறக்க முடிவு செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் பத்திரமாக காலை 7.15 மணிக்கு விமானம் இந்தூ ரில் தரையிறங்கியது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட உடன் பயணிகள் பீதி அடைந்தனர்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதி யாக, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது. பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணமும் திருப்பித் தரப்பட்டது. இதன் பின்னர், பொறியாளர்கள் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.