குஜராத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்

1 Min Read

பிஜேபி ஆட்சியின் லட்சணம் பாரீர்!

அகமதாபாத், ஜூலை 6 பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அம்மாநிலத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் சிக்கியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்திரநகர் மாவட்டத்தின் கெர்டி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள பண்ணை வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காந்திநகர் மாநில கண்காணிப்புக் குழுவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1,000 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 8,596 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இந்த மதுபானங்களின் மதிப்பு மட்டும் ரூ.1.19 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மதுபானங்கள் மற்றும் கடத்த லுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் உட்பட மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *