ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவி டெரிக் ஓபிரையன்

Viduthalai
(C) Biswarup Ganguly

புதுடில்லி, ஜூன் 29- ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவியாகவும் திகழ்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் தெரிவித்தார்.

‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது கலாச்சாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்து கொள்ள முடியாது’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார்.

உலகமயமான சூழ்நிலையில்

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது வலைதளத்தில் டெரிக் ஓபிரையன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘ஆங்கிலம் கற்பதால் இந்தியா்கள் யாரும் தாழ்ந்துவிட மாட்டார்கள். இன்றை உலகமயமான சூழ்நிலையில் ஆங்கிலம் கற்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உலக நாடுகளுடன் நாம் தொடா்பில் இருக்க முடியும்.

முன்னேற்றம்

ஆங்கிலம் என்ற கருவியைப் பயன்படுத்திதான் கோடிக் கணக்கான இந்தியா்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந் துள்ளனா். அந்த மொழிதான் பலரின் வாழ்க்கைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.

வரலாற்று ரீதியாகவே பல கல்வி நிலையங்களை நாம் உருவாக்கவும், இந்தியா உலகுடன் இணைக்க ஆங்கிலமே பயன்பட்டுள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவும் அவா்களின் ஆங்கிலம்தான் நமக்கு உதவிகரமாக இருந்தது.

காந்தியார், பி.ஆா்.அம்பேத்கா், ராஜாஜி, மவுலானா அபுல் கலாம் ஆசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், சாவித்ரிபாய் பூலே, வாஜ்பாய் உள்பட இந்தியத் தலைவா்கள் ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினா்.

இந்தியா பரந்துவிரிந்த, பல மொழிகள் பேசும் பன்முகத் தன்மையுள்ள நாடாக உள்ளது. ஆங்கிலம் என்ற கருவிதான் இந்தியா்கள் தங்களுக்குள் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்தியா்கள் பலா் வெளிநாடுகளுக்குச் சென்று உயா் பதவிகளை அடைய ஆங்கில மொழி பெரிதும் உதவியது.

முட்டுக்கட்டை

இதனை மறந்துவிட்டு ஆங்கிலம் பேசுவதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறுவது, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என்று கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *