புதுடில்லி, ஜூன்.22- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது தூரத்தில் ஒரு கட்டடத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அந்த விமானத்தில் இருந்த விமானி, பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியானார்கள். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, ஏர் இந்தியா போக்குவரத்தின் வருகைப் பதிவேடு, பணிப் பதிவேடு, செயல்பாட்டு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் சில விதிமீறல்கள் கண்டுபி டிக்கப்பட்டன. நிர்ணயிக் கப்பட்ட நேர வரம்பைவிட கூடுதல் நேரம் விமானி களுக்கு பணி ஒதுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது போல மேலும் சில விதி மீறல்கள் கண்டுபிடிக் கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அந்த விதிமீறலில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப் பித்தது. இந்த உத்தரவை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று உடனடியாக செயல்படுத்தியது. 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததுடன் அந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் தெரிவித்து இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட நடவடிக் கையில், இயக்க கட்டுப்பாட்டு மய்ய தலைவர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.