ஆம்ஸ்டாம். ஜூன் 21- அய்ரோப்பிய நாடான நெதர்லாந்தில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட், முக நூல், டிக்டாக் உள்ளிட்டவற்றில் கணக்கு தொடங்கி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை சந்திப்பதாகவும்,வன்முறைசெயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில் நெதர்லாந்தில் 16 வய துக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அந்த நாட்டின் அரசாங்கம் தடை விதித்துள்ளது.