கிருட்டினகிரி, ஜூன் 18- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் ஒன்றியம் பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி ஊராட்சி பெரியபுளியம்பட்டி தி.மு.க. மூத்த முன்னோடி கிளைக் கழக செயலாளரும் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் நிர்வாகியுமான மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) இராஜசேகரன் மற்றும் பெங்களூர் (அறிவியல் அறிஞர்) திருஞானசம்பந்தம் ஆகியோரின் தந்தையும், அரசம்பட்டி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் பகுத்தறிவாளர் கழக நிர்வாகியுமான ப. இளையராஜா, மாவட்ட ப.க.துணைச் செயலாளர் பொறியாளர் ப.செயக்குமார், பர்கூர் ஒன்றிய கழக செயலா ளர் ப.பிரதாப் ஆகியோரின் தாத்தாவும், கிருட்டினகிரி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் (பணிநிறைவு- RTO) சாமியின் மாமனாரும் பணி நிறைவுப் பெற்ற தலைமை ஆசிரியருமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது தீவிர பற்றுக் கொண்டவருமான திராவிட இயக்க கொள்கையாளர் பண்ணந்தூர் பெரிய புளியம்பட்டி திமுக கிளை செயலாளர் சின்னக் கண்ணன் (வயது 97) வயது மூப்புக்காரணமாக 14.6.2025 – இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.
அரது மறைவு செய்தி அறிந்து மாவட்ட கழக சார் பில் 15.6.2025 – மதியம் ஒரு மணியளவில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, த.அறிவரசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், பகுத்தறி வாளர் கழகம் ஜோதிபாசு, சுரேசு உள்பட கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது உடல் அவரது பண்ணைத் தோட்டத்தில் மாலை 3.00 மணியளவில் அடக்கம் செய் யப்பட்டது.